"யான் செய் புண்ணியம் அனைத்தும்" - 28/08/22 தினமணி தமிழ்மணியில் பிழைபட்ட விளக்கம்
"யான் செய் புண்ணியம் அனைத்தும்" Inbox T R Suresh < sureshtr1957@gmail.com > 18:06 (0 minutes ago) to thamizhmani அன்புடையீர்! வணக்கம். 21/08/2022 தேதியிட்ட தமிழ்மணி யில் "யான் செய் புண்ணியம் அனைத்தும்" என்னும் தலைப்பில் வந்த கட்டுரையைக் கண்டேன். தருமன் சூதாட்டத்தில் விருப்பமுடையவன் என்று மகாபாரத த்தில் கூறப்பட்டுள்ளது. விதுரனும் சூதாடி நாட்டையும் செல்வத்தையும் கைப்பற்றவே துரியோதனன் தருமனை அத்தினாபுரம் வருமாறு தன் தந்தை திருதராட்டிரன் மூலம் அழைப்பு விடுத்துள்ளான் என்று எச்சரிக்கின்றான். எனினும், தருமன் முதலில் சகுனியுடன் சூதாட மறுத்து, கர்ணனால் சீண்டப்பட்டு அதற்கு உடன்படுகின்றான் என்று கூறுகிறார் வில்லிபுத்தூர் ஆழ்வார். முதலில் பணையமாக வைத்த மணிமாலையையும் அடுத்து கிருஷ்ணன் தந்த தேரையும் தருமன் சகுனியிடம் இழக்கின்றான் என்று கூறிய வில்லிபுத்தூரார், அடுத்த செய்யுளில் தருமன் பலவற்றைக் கொடுத்தான் என்கின்றார். இதை விரும்பிக் கொடுத்ததாக கட்டுரையாசிரியர் கூறியுள்ளது வலிந்து பொருள் கோடலின்பாற்...