தனித்தமிழ் அழிவழி!
தனித்தமிழ் அழிவழி! வேற்றுமொழிக் கலப்பின்றி எம்மொழியும் வளரமுடியாது. வளர்ச்சி இல்லையேல் அம்மொழி தேய்ந்து, அழிந்து போகும். தமிழில் வேற்றுமொழிச் சொற்கள் கூடாதென்போர் தமிழுக்குப் பெருந்தீங்கு செய்கின்றனர். சொல்வளம் (vocabulary) என்பது யாது? மொழி உரைக்கும் பொருள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சொல், அதுவும் ஒற்றைச்சொல், இருக்கவேண்டும். அச்சொல் வேறு பொருளையோ பொருட்களையோ குறித்தாலும் அப்பொருள் தலைப்பொருளாகவாவது அமையவேண்டும். அப்படியானால் பேரகராதியில் குறிப்பிட்ட பொருள் முதலாவதாக வைக்கப்படும். அவ்வாறன்றி, வேறு பொருளைத் தலைப்பொருளாகக் கொண்ட ஒரு சொல்லை குறிப்பிட்ட ஒரு பொருளுக்கும் பயன்கொள்வது தவறன்று, ஆயின் சிறப்பின்று. அவ்வாறே இச்சொற்கள் கொண்டு உருவாவதும் தவறன்று, ஆயின் சிறப்பின்று. இதற்கு எடுத்துக்காட்டுகள் பல சொல்லிக்கொண்டே போகலாம். என...