"யான் செய் புண்ணியம் அனைத்தும்" - 28/08/22 தினமணி தமிழ்மணியில் பிழைபட்ட விளக்கம்
"யான் செய் புண்ணியம் அனைத்தும்"Inbox
அன்புடையீர்! வணக்கம். 21/08/2022 தேதியிட்ட தமிழ்மணியில் "யான் செய் புண்ணியம் அனைத்தும்" என்னும் தலைப்பில் வந்த கட்டுரையைக் கண்டேன். தருமன் சூதாட்டத்தில் விருப்பமுடையவன் என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. விதுரனும் சூதாடி நாட்டையும் செல்வத்தையும் கைப்பற்றவே துரியோதனன் தருமனை அத்தினாபுரம் வருமாறு தன் தந்தை திருதராட்டிரன் மூலம் அழைப்பு விடுத்துள்ளான் என்று எச்சரிக்கின்றான். எனினும், தருமன் முதலில் சகுனியுடன் சூதாட மறுத்து, கர்ணனால் சீண்டப்பட்டு அதற்கு உடன்படுகின்றான் என்று கூறுகிறார் வில்லிபுத்தூர் ஆழ்வார். முதலில் பணையமாக வைத்த மணிமாலையையும் அடுத்து கிருஷ்ணன் தந்த தேரையும் தருமன் சகுனியிடம் இழக்கின்றான் என்று கூறிய வில்லிபுத்தூரார், அடுத்த செய்யுளில் தருமன் பலவற்றைக் கொடுத்தான் என்கின்றார். இதை விரும்பிக் கொடுத்ததாக கட்டுரையாசிரியர் கூறியுள்ளது வலிந்து பொருள் கோடலின்பாற்படும் என்பதில் ஐயமேதுமின்று. சூதாடுவோர் வழக்கமாகச் செய்வது போன்றே தருமன் தோற்கத் தோற்க வெறிமிகுந்து அனைத்தையும் இழந்து தன் தம்பியரையும் தன்னையும் இழந்து இறுதியாகத் தன் அருமை மனைவி பாஞ்சாலியையும் சூதில் இழக்கின்றான். இதையும் அவன் விரும்பிக் கொடுத்தான் என்கிறாரா கட்டுரையாசிரியர்? இறுதியாக திரௌபதி கூறியபடி அடிமைத்தளை நீங்க தருமன் சூதாடும்போது பணையமாக 'யான் செ முன்னால் செய்த புண்ணியம் அனைத்தும் சூதாடுதல் என்ற பாவச் செயலால் ஒழிந்து போயிற்று என்கிறார் கட்டுரையாசிரியர். இந்து சமயக் கொள்கையின்படி இது முற்றிலும் தவறு. செய்த புண்ணியங்களையும் பாவங்களையும் கூட்டிக் கழித்து எஞ்சுவதற்கே வினைப்பயன் எய்தும் என்பது தவறு. நல்வினை தீவினை இரண்டின் பயன்களையும் அவ்வவற்றை முழுதாக அனுபவிக்க வேண்டுமென்பதே இந்து மதக் கொள்கை. கட்டுரையாசிரியரின் கருத்து இதற்கு முற்றிலும் முரண்படுவது. பின்னால் கர்ணன் 'ஓவிலாது யான் செய் புண்ணியம் அனைத்தும்' என்னும் போது எவ்வாறு அது கடந்த காலத்தைக் குறிக்கின்றதோ அவ்வாறே இங்கும் கொள்ளுதலே முறை. எனவே, 'யான் செய் புண்ணியம் அனைத்தும்' என்பது கடந்த காலத்தையே குறிப்பது. "செய்புண்ணியம்" என்பது வினைத்தொகை ஆகாது. இனி செய்யப் போகும் புண்ணியத்துக்கு முன்னதாகவே பயன் கிடைக்கும் என்பது உலகில் எந்த சமயத்திலும் காணாத புதுக்கொள்கை. இதற்குச் சான்றேதும் கட்டுரையாசிரியர் அளிக்காது இவ்வாறு கூறுதல் ஏற்புடைத்தன்று. உலக நடைமுறையிலும்கூட இது ஏற்கப்படு இறுதியாக ஒன்று, தருமன் விரும்பியே தனது அனைத்தையும் துரியோதனனுக்குக் கொடுப்பதற்கா காவியங்களிலும் பிற நூல்களிலும் புதுப்பொருள் தேடுவோர் மூலத்துக்கும் பெரியோர் தந்த உரைக்கும் மாறுபடாது இருத்தல் அவசியம் என்பது கண்கூடு.இன்றேல் விபரீதப் பொருள் விளையும். "ஒரு சிறு உண்மையால் குலைந்து போன ஓர் அழகிய கோட்பாடு" என்னும் நிலைதான் நேரும். அன்புடன், மரு. த.ரா. சுரேஷ், 1/1, மூன்றாவது தெரு, மேற்கு மாம்பலம், சென்னை- 600033 9940354935
| ||||||||||||

Comments
Post a Comment