Posts

Showing posts from April, 2023

ஆபாசம் மாறும் காலங்கள் தோறும், ஆனாலும் கோணல் மாறாது எந்நாளும்!

                 ஆபாசம் மாறும் காலங்கள் தோறும்,                                ஆனாலும் கோணல் மாறாது எந்நாளும்!                                    டி.ஆர். சுரேஷ்  கோவில்களில் காணப்படும் சிலைகளை ஆபாசக் கண் கொண்டு நோக்கிப்  பழித்துரைக்கும் இழிந்த பண்பு சென்ற நூற்றாண்டிலிருந்தே ஆங்காங்கே காணப்படுகிகின்றது. இதிலும் தமிழகம் முன்னோடியாகவே நிற்கின்றது. கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் வரும் அங்கவர்ணனைகளையும் இவ்வாறே மாறுகண் கொண்டு கூறுவோர் சிலரிருந்தனர். (மற்ற காப்பியங்கள், சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றைக் குறைகூற இவர்கள் துணிந்ததேயில்லை என்பது வேறு விஷயம்.) இக்காலம் இரண்டாம் கோளாறு அவ்வளவாகக் காணப்படுவதில்லை. ஆனால் முதல் கோளாறு மீள்நோய் போன்று அவ்வப்போது வருகின்றது.  இந்த மேதாவிகள் M F ஹுஸைன் போன்றோர் தெய்வ...

சங்ககாலம் மட்டும் மீண்டும் வேண்டுமோ?

  அன்புடையீர்!           "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்பது ஆன்றோர் கூற்று. ஆனால், "நிறைவேறக்கூடாத கனவு" என்னும் கட்டுரையில் ( தினமணி 4.4.23) ஏதோ பண்டைத் தமிழகத்தில் பிராமணர் மட்டுமே உயர்குலம் என்றிருந்தது போன்றும் மற்ற மக்கள் அனைவரும் ஒரே குலமாக வாழ்ந்துவந்தது போன்றும்  ஒரு மாயத்தோற்றத்தைக் காட்டுகின்றா ர். பிராமணரல்லாதாரிடையேயும் சாதிவே றுபாடு அன்று கடைப்பிடிக்கப்பட்டதை ஏன் அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை? இன்றும் பிராமணர் பட்டியல் இனத்தவர் மீது சாதிக்கொடுமை கடைப்பிடிப்பதாகக் குற்றம்சாட் டப்படுவதை எங்குமே காணபதில்லையே! பிற "மேல்சாதியினர்"தாமே அக்கொடுமை யைத் தொடர்ந்து வருகிகின்றனர்?            "ஆரியர்"தாம் சாதிமுறையைக் கொணர்ந்தனர் என்பது பெருமையாகாது. அதைத் தவறென்று ஒதுக்கும் நல்லறிவு ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்துக்குமே பல்லாயிரம் ஆண்டுகட்கும் இல்லாமல் போய்விட்டதா? "ஆரியர்கள்" தமிழ்நாட்டை வென்று இங்குத் தம் கலாச்சாரத்தைத் தி...

அச்சமூட்டும் அயல்மாநிலத்தார் வெறுப்பு!

29.3.23 அன்று தினமணியில் வெளியான சுப. உதயகுமார் என்பவர் எழுதிய “அச்சமூட்டும் அந்நியர் குடியேற்றம்” என்னும் நடுப்பக்கக் கட்டுரைக்கு என் கடிதத்தின் முழு வடிவம். அன்புடையீர்! வணக்கம். "அச்சமூட்டும் அந்நியர் குடியேற்றம்!" என்னும் நடுப்பக்கக் கட்டுரை கண்டு மிக்கு வருந்தினேன். அக் கட்டுரை நச்சுக் கொள்கை நிரம்பிய பொய்கை. " எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்  எல்லாரும் இந்திய மக்கள்" என்று பறையறைந்து "பாரத சமுதாயம் வாழ்கவே!" என்று பாடிய பாரதி கனவிலும் கருதியிருக்க முடியாத இழிநிலையை இன்று  நாம்   எய்திவிட்டோம் . "அந்நியர்" என்னும் சொல் வெள்ளையரை மட்டுமே குறித்த காலம் மாறி நம் நாட்டு மக்களில் சிலரையும் குறிக்கும் கேடுகாலம் இது! "வட மாநிலத்தார்" என்னாது "வட நாட்டார்" என்று கூறுவது ஆசிரியரின் பிரிவினை மனப்பான்மையையே வெளிப்படுத்துகி ன்றது. "வேலைக்குக் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் ஒழுங்காக வருவதில்லை; வந்தாலும் ஒழுங்காக வேலை செய்வதில்லை; செய்தாலும் இடைநிறுத்தம் பல; காசு கிடைத்ததும் குடிக்கப் போய்விடுகின்றனர்" என்பன தொழில் முனைவோர்...